கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏழுமலை இந்திரா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் ஏழுமலையை வழிமறித்து அவரை தாக்கியதோடு அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரையும் 17 வயது சிறுவரையும் கைது செய்துள்ளனர்.