விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாகாந்த். இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும் உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சொத்து தகராறு வேறு வெகு நாட்களாக நீடித்து வந்த நிலையில் சம்பவத்தன்று உமாகாந்த் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது உறவினர்களான அச்சம்மாள், ராஜ்குமார் ,சஞ்சய்குமார், தவ சத்யபாமா ஆகியோர் உமாகாந்திடம் சொத்து பிரச்சனை குறித்து வாக்குவாதம் செய்தனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சஞ்சய்குமார் உமாகாந்தை அறிவாளால் வெட்டியுள்ளார்.

ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உமாகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடு்த்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.