ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் கூலி வேலை பார்க்கும் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் குமார் 6 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் குமாருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.