திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாலை பட்டியில் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சிலர் ஜோஸ்வாவை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ஜோஸ்வா திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

இந்நிலையில் ஜோஸ்வா பணியில் இருந்த டாக்டரிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜோஸ்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.