திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 3 நாட்டு மாடுகளையும், 9 சிந்து வகை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சினையாக இருந்த ஒரு சிந்து வகை மாடு நேற்று காலை 2 கன்று குட்டிகளை நின்றது. அந்த இரண்டும் காளை கன்றுகள்.

பொதுவாக மாடு ஒரு கன்று குட்டியை மட்டுமே ஈனும். ஆனால் ஒரே நேரத்தில் மாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் வந்து பசுவையும், கன்றுகளையும் பார்த்து சென்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.