சென்னையில் வரும் 17ஆம் தேதி மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில், காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.