அதிமுக மாநாடு மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருங்கால பிரதமர் எடப்பாடியார் அழைக்கிறார் என, மதுரை, சிவகங்கை பகுதிகளில் அதிமுக நிர்வாகி மணிமாறன் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மணிமாறன், முதலமைச்சர் மட்டுமல்லாமல் பிரதமர், ஜனாதிபதி ஆகும் அளவுக்கு எடபடிக்கு க்கு தகுதி உள்ளதாக கூறினார். இந்த போஸ்டரால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.