தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த நலத்திட்ட உதவிகளை அரசு தரப்பில் இருந்து சரியாக பெற முடியும்.

இந்த நிலையில் ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்ய இன்று ஜனவரி 20ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சென்னை மண்டல உதவியாளர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரேஷன் பொருள்களை பெறுவது மற்றும் உதவித்தொகை ஆகியவற்றில் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.