ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் உண்மையானவர்களாய் இல்லையா என்பதை கண்டறிவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே இதுவரை E- KYC முடிக்காத ரேஷன் அட்டைதாரர்கள் உடனே முடித்து விடுங்கள்.