இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் விமான பயணிகளுக்காக புதிய பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பறக்கும் போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கும் வகையில் விமானத்தில் ரோமிங் திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் விலைகள் 195 ரூபாய் முதல் தொடங்குகின்றது. இதனைக் கொண்டு ரீசார்ஜ் செய்தால் டேட்டாவை பயன்படுத்துவதோடு அழைப்புகளையும் செய்யலாம். மேலும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு பயனர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.