ரிலையன்ஸ் ஜியோ இலவச ரீசார்ஜ் என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜியோ சிம்கள் அறிமுகம் செய்யப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில் 555 ரூபாய் ரீசார்ஜ் இலவசம் என்று போலியான மெசேஜ்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது.

இது போன்ற இலவச ஆஃபர்களை நம்பி அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தால் தனிநபர் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் திருடப்படும். இதனால் வாட்ஸ்அப் ஆகியவற்றில் வரும் இது போன்ற போலி சலுகைகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.