அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் ராமர் மற்றும் அயோத்தி கோவில் புகைப்படங்கள் உடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இந்த 500 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வரும் நிலையில் இது போலியான நோட்டு என்று கூறப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.