கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் இரண்டு இந்திரா கேன்டீன்கள் தொடங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில் காலை உணவு ஐந்து ரூபாய்க்கும், மதிய உணவு பத்து ரூபாய்க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.