தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களை ஊக்குவிக்க அரசு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு மூலம் மூக்க தொகை வழங்கி வருகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படும். இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நகர் பகுதி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.