குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி கூறி வரும் நிலையில், ஆண்களும் நன்றி தெரிவிக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவை தெறிக்க விடுகிறது. 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் “Thank you CM sir.. I RECEIVED RS.1000/- மகளிர் தொகை” என்ற வாசகத்துடன் பதாகையை கையில் ஏந்தி நன்றி கூறியுள்ளார்.