தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள்  தொடங்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏராளமானவர்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வேண்டாம் என்று 64 லட்சம் பெண்கள் கூறியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். வசதி வாய்ப்புடன் இருப்பதால் அரசுக்கு உதவும் வகையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அதேநேரம், உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்