தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருநெல்வேலிமாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும். கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்ற மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.