சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாமை நேற்று தொடங்கி வைத்து அமைச்சர் 100 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு விரைவில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.