சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வாகும் 100 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15ம் தேதி இன்று கடைசி நாளாகும். எனவே விருப்பமுள்ளவர்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.