தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 10000 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.