தமிழ்நாட்டில் மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலியில் மக்களவை பொதுத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடே பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில்  பனங்காட்டு படை கட்சி நிறுவனர் ராக்கெட் ராஜா இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாடார் வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவினை தெரிவியுங்கள் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.