தமிழகத்தில் இந்த வருடம் 76 ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அன்றைய நாள் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். என் நிலையில் இந்த விருது பெற தகுதி உள்ளவர்கள் 15 வயது முதல் 35 வயது உடைய ஆண் மற்றும் பெண் என இருப்பாளரும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் கடந்த ஆண்டில் செய்த சேவைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அதனைப் போலவே மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்த விருது பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூலை இருபதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.