தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் உரிமை தொகை யார் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முகாம்களை ஏற்பாடு செய்தல், முகாம்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்வது, முகாம்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் ஆகியவை குறித்து அரசு ஆலோசனை செய்தது.

மேலும் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்திற்கான கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் எந்த ஒரு தகுதியுள்ள குடும்ப தலைவியும் விடுபட்டு விடக்கூடாது எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.