ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 115 இல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் அம் மாநில முதலமைச்சர் யார் என பாஜக தலைமை அறிவிக்காமல் உள்ளது. இந்த சூழலில் அக்கட்சியில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் முன்னாள் முதலமைச்சராக இருந்த வசுந்தரராஜே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.