டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு அடிக்கடி சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் தர்மா போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.