கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக அஞ்சல் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.