கர்நாடகா மாநிலத்தில் ராஜீவ் காந்தி ஹவுஸிங் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் சொந்த வீடு கட்டித் தருவதற்கு அரசு உதவி செய்கிறது. அதாவது பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சொந்த வீடு கட்டித் தரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் ராஜீவ் காந்தி ஹவுசிங் கார்ப்பரேஷன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு முதலில் https://ashraya.karnataka.gov.in/nannamane/index.aspx  என்ற இணையதள பக்கத்திற்கு சென்று சட்டமன்றத் தொகுதி மற்றும் மண்டலத்தை தேர்வு செய்து அதன் பிறகு ஆதார் எண் மற்றும் பான் எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். உங்களுடைய விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தகுதியுடையவர்களாக இருந்தால் அரசு சார்பில் வீடு கட்டி தர ஏற்பாடுகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.