காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் தகுதி நீக்கம் எதிர்பார்த்ததுதான். ராகுலின் தகுதி நீக்கத்தை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம். உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெறப் போவது உறுதி என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுலுக்கு பதவி திருப்பி தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.