காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நிக்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் சதிகளை மீறி எத்தகைய விலை கொடுத்தேனும் ராகுல் காந்தி தனது போராட்டத்தை தொடர்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.