உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடத்து வரும் நிலையில் இரண்டு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று இரவு கிளஸ்டர் குண்டுகள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்புகள் சேதமடைந்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையும் அடங்கும்.