பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணி ஒருவர் தன்னுடைய பயண கட்டணத்துடன் காப்பீட்டுத் தொகையாக 35 பைசா செலுத்தினால் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற முடியும். அதாவது ஐ ஆர் சி டி சி செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயண காப்பீடு விருப்பத்தை கிளிக் செய்து கூடுதலாக 35 பைசா செலுத்தினால் மட்டும் போதும். ரயில் விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள் விண்ணப்பித்தால் இறப்பு அல்லது நிரந்தர ஊனத்திற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். அதுமட்டுமல்லாமல் சிகிச்சைக்கு இரண்டு லட்சமும் சிறிய காயங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும் இழப்பீடு பெறலாம்