தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தற்போது கன்னட சினிமாவில் உருவாகியுள்ள கப்ஜா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, ரஜினி மிகவும் எளிமையான மனிதர். சிவாஜி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். நடிகர் ரஜினி படப்பிடிப்பு அரங்கில் லைட் மேன் போன்றோருக்கும் வணக்கம் வைப்பார். நடிகர் ரஜினியுடன் நடிக்க விரும்பாதவர் எவருமே இருக்க மாட்டார். மேலும் எனக்கு ரஜினியுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.