தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், அயோக்யா, திருசிற்றம்பலம், அடங்கமறு, சங்கத்தமிழன், சர்தார் மற்றும் திருசிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்திய பேட்டியில் சினிமாவில் நீடித்திருப்பதற்கு அழகு மட்டும் போதாது, தேர்ந்தெடுக்கும் கதையும் முக்கியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ரசிகர்களின் மனதில் நீண்ட நாள் இடம் பெறுவதற்கு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்.

நான் இப்போது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். இதுவரை ரசிகர்கள் என்னை ஜாலியான கதாபாத்திரத்தில் பார்த்திருப்பார்கள். எனக்கும் அதே போன்று கதாபாத்திரங்கள் தான் வந்தது. ஆனால் நடிப்பு திறமையை வித்தியாசமான கதைகளின் மூலம் வெளிக்கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்ததால் இனி அதுபோன்ற கதைகளில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் சினிமாவில் இனி என்னை வேறு மாதிரி பார்ப்பீர்கள். எனக்கு சினிமாவும் ஓடிடி படங்களும் வித்தியாசமானதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.