பிரபல உணவு விநியோக நிறுவன ஸ்விக்கி தனக்கு வந்துள்ள ஆர்டர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் மேலாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

அதனைப் போலவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை 4.6 லட்சம் ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் 45 நாட்களில் சுமார் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார். இவர் இந்திய அளவில் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆதார் செய்த நபர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.