ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் டிக்கெட் புக் செய்யும் போதெல்லாம் அதற்கான சீட் உங்களுக்கு கிடைக்காது. நிறைய பேர் ரயில் டிக்கெட் புக் செய்யும் பொழுது தங்களுக்கான சீட்டு இதுதான் என்று தேர்வு செய்வதால் பெர்த்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் நமக்கு ஏதோ ஒரு பெர்த் ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது பெரும்பாலானவர்கள் கீழ் பெர்த் வேண்டும் என்று தேர்வு செய்யவார்கள்.

ஆனால் கீழ் பெர்த் என்பது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். பயணிகளுடைய வசதிக்காக ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் தொடர்பான சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வைத்துள்ளது . பயணிகள் அதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்க முடியும். இந்திய ரயில்வே விதிகளின் படி மிடில் பெர்த் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பெர்த்தில் தூங்க முடியும்.

அந்த நேரத்தை தாண்டி தூங்கினால் மற்ற பயணிகள் அவர்களை எழுப்பி விடுவார்கள். காலை 6 மணிக்கு பிறகு மற்ற பயணிகள் கீழ்ப் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பேரத்தை மடக்கி வைக்க வேண்டும். அதேபோல இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் தூங்கிய  பிறகு யாரும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. டிக்கெட் பரிசோதகர் கூட அந்த நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் பயணத்தை தொடங்கும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனைக்காக வந்தால் இந்த விதிமுறை பொருந்தாது.