மெட்ரோ தூண்கம்பிகள் சரிந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய் மற்றும் 2 1/2 வயது மகன் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரேங்கேறியுள்ளது.

பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கென என்சிசி நிறுவனம் அமைத்திருந்த 40 அடி உயர இரும்பு கம்பி தூண் நேற்று காலை எதிர்பாராத வகையில் சாலையில் சாய்ந்து விழுந்தது. இந்நிலையில் அவ்வழியாக சாலையில் சென்ற பைக் மீது அந்த இரும்பு கம்பி தூண் விழுந்தது. இதனால் பைக்கில் பயணம் மேற்கொண்ட லோகித்குமார், அவரது மனைவி தேஜஸ்வினி(28), 2 1/2 வயது மகன் விஹான் மற்றும் மகள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் 4 பேரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தேஜஸ்வினி மற்றும் அவரது மகன் விஹான் ஆகிய  இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில் லோகித்குமார் மற்றும் அவரது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

https://twitter.com/Terry_anthony2/status/1612696711973199873?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612696711973199873%7Ctwgr%5E899cbb345ddacfb4f9041ad6fffd8508e62c6009%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fnews%2Findia%2Fbengaluru-accident-bengaluru-metro-pillar-comes-crashing-down-killing-woman-son-95791