சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கே.ஆர்.மகாலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமை தாங்கியுள்ளார். கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகு ராஜ் முன்னிலை வகித்துள்ளார். தேவகோட்டை தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் செங்கதிர் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ரத்தம் சேகரித்துள்ளனர். இந்நிலையில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் எஸ்.பழனிசாமி ஏற்பாட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.

இதில் மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர், வக்கீல் ராமநாதன், மாநில இளைஞரணி செயலாளர் திருஞானம், பேரவை இணைச் செயலாளர் ரஜினி, மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் ஆசை தம்பி, தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், தேவகோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகு, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, ஒன்றிய செயலாளர் பாவாசி கருப்பையா, வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத், கன்னங்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததான முகாமில் ரத்தம் வழங்கியுள்ளனர்.