26 வயதே ஆன முன்னாள் உலக அழகி போட்டியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ல் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு உலக அழகி போட்டியில் பங்கேற்ற பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.