தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதன்மைச் செயலாளர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அலுவலர்களும் தங்களின் பகுதிக்கு உட்பட்ட கூட்டப் பொருள்களின் விவரங்களை தயாரித்து மின்னஞ்சல் மூலமாக ஜூன் இருபதாம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.