மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு நேற்று தொடங்கியது.

தொடங்கிய முதல் நாளே அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாளான இன்று அவை கூடியது. அவை தொடங்கியதும் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவும், அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளும் முழக்கங்களை எழுப்பின. தொடர் கோஷத்தால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.