புதுச்சேரி திமுக எம்எல்ஏ நாஜிம், தமிழிசையை பாராட்டுவது போல் ஆர்.என்.ரவியை விமர்சித்தார். மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்த ஆளுநர் தமிழிசைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை செய்யவில்லை என திமுக எம்எல்ஏ நாஜிம் குற்றம் சாட்டினார். மேலும் நிதி மேலாண்மையை மாநில அரசு சிறப்பாக செய்துள்ளதாக ஆளுநர் தமிழிசை கூறுவது முரணாக உள்ளது என தெரிவித்தார்.