இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் பிணயக் கைதிகளை மீட்க வேண்டும் என்பதற்காக போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இரண்டாவது மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயார் என்று அந்நாட்டின் அதிபரான ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரான இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்து செல்கிறார். அங்கு போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.