இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் பிணயக் கைதிகளை மீட்க வேண்டும் என்பதற்காக போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.