அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் அருண்பாண்டியன் தலைமை வகிக்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதோடு மின்வாரிய செயற்பொறியாளரை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர்.