கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பம் தெற்கு வெள்ளூர் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தப்பதிகளுக்கு 7 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் கூலி தொழிலாளியான வினோத் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தவறாக செய்துள்ளார். இதனால் கோபத்தில் சித்ரா தனது கணவரை விட்டு பிரிந்து ஒரு ஆண்டுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றார்.

இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த வினோத் குமார் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த வயரை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் உடல் கருகி வினோத்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.