கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தனபள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாதேஷின் மனைவி செல்வி நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் கடையில் தயிர் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உறவினரான சேகர் செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றார். இதுகுறித்து செல்வி தனது கணவர் மாதேஷிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு கோபமடைந்த மாதேஷ் சேகரின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்தார். மேலும் கோபத்தில் சேகரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த சேகரை அக்கா பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.