சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அல்லி நகரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரை ஆயுதப்படை 6-வது பாட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜ் பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற்றது. நேற்று தான் வசிக்கும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ராஜ் பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜ் பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் ராஜ் பிரபாகரனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். எனவே மன உளைச்சலில் இருந்த ராஜ் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.