பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய தங்களுடைய சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு வழங்கும் பராமரிப்பு உதவித் தொகை ரூ.2000 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2,11,391 நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை, தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.