மார்ச் 1ஆம் தேதி சென்னையில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் மற்றும் தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் பிரச்சாரக் கூட்டமாகவும் இந்த கூட்டம் அமைய உள்ளது. INDIA கூட்டணியின் தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.