2014 ஆம் ஆண்டு கடலூரில் மனைவியை கொன்ற விவகாரத்தில் கணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலித் பெண் சீதாவை சரவணன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தாயாருடன் சேர்ந்து கொண்டு சீதாவை கீழ்த்தரமாக நடத்தி வீட்டை விட்டு வெளியேற சொல்லி இருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த சீதாவை தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவனுடன் சேர்ந்து கொண்டு சரவணன் கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.